செங்கல்பட்டு: பெட்ரோல் நிலையத்தில் ரூ.83,000 கொள்ளை; வெளிநாட்டு கொள்ளையர்கள் கைவரிசை

செங்கல்பட்டு: பெட்ரோல் நிலையத்தில் ரூ.83,000 கொள்ளை; வெளிநாட்டு கொள்ளையர்கள் கைவரிசை

செங்கல்பட்டு: பெட்ரோல் நிலையத்தில் ரூ.83,000 கொள்ளை; வெளிநாட்டு கொள்ளையர்கள் கைவரிசை
மதுராந்தகம் அருகே பெட்ரோல் நிலைய மேலாளரின் கவனத்தை திசைதிருப்பி வெளிநாட்டினர், 83 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பவுஞ்சூர் கிராமத்தில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் இன்று வெளிநாட்டினர் 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பெட்ரோல் போடுவதாக கூறிவிட்டு, 2,000 ரூபாய் நோட்டை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை என்றும் எங்களிடம் வெளிநாட்டு நோட்டுகள்தான் உள்ளது என்றும் 2,000 ரூபாயை காண்பிக்குமாறும் ஊழியரிடம் கூறினர். அந்த ஊழியர் தன்னிடம் 2,000 ரூபாய் பணம் இல்லை என கூறிவிட்டு, மேலாளரிடம் உள்ளதாக சொல்லி, மேலாளர் ஜெயகிருஷ்ணனிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது மேலாளரிடம் பேசுவது போன்றே நடித்து அவரின் கவனத்தை திசைதிருப்பிய வெளிநாட்டினர் 83 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றனர். அவர்கள் சென்றபின்னர் தான் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஜெயகிருஷ்ணன் அனைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டு இந்த சிசிடிவி பதிவை வைத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com