எச்சரிக்கையை மீறி சிறுமிக்கு கட்டாய திருமணம் - மணமகன் உட்பட 3 பேர் கைது

எச்சரிக்கையை மீறி சிறுமிக்கு கட்டாய திருமணம் - மணமகன் உட்பட 3 பேர் கைது
எச்சரிக்கையை மீறி சிறுமிக்கு கட்டாய திருமணம் - மணமகன் உட்பட 3 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்ததாக மணமகன் உட்பட 3 பேர் கைது செய்து செய்யப்பட்டனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் புதுக்கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் செய்ய சிறுமியின் பெற்றோர் முடிவு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் ஆலோசகர் தீபக்குமார் என்பவர் சிறுமியின் பெற்றோரிடம், குழந்தை திருமணம் செய்வது குற்றம். திருமணம் நடத்தக் கூடாது எனக் கூறியுள்ளார்.

ஆனால் அதையும் மீறிய சிறுமியின் பெற்றோர் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சத்தியமங்கலம் அருகே ஒரு கோயிலில் சிறுமிக்கும், சுரேஷ்குமாருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

இதுகுறித்து தகவல் தெரிந்த தீபக்குமார் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த மணமகன் சுரேஷ்குமார், மணமகனின் பெற்றோர், சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


இதையடுத்து சிறுமியை கட்டாய திருமணம் செய்ததாக சுரேஷ்குமார் அவரது தந்தை வீரக்குமார் சிறுமியின் தாயார் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com