பேஸ்புக் மூலம் பழகிய சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

பேஸ்புக் மூலம் பழகிய சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

பேஸ்புக் மூலம் பழகிய சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

தூத்துக்குடியில் பேஸ்புக் மூலம் பழகிய சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த மதுரை இளைஞர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா என்பவரின் மகன் அப்சல்கான் (32), இவருக்கு முகநூல் மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனிடையே மகளை காணவில்லை என்று சிறுமியின் தாயார் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற அப்சல்கானை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com