அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுகவை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுகவை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுகவை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு

அனுமதி இல்லாமல் பேனர் வைத்ததாக அதிமுகவைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருகம்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வி.என்.ரவியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி விருகம்பாக்கம் நாராயணசாமி தெருவில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரையடுத்து, அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுகவை சேர்ந்த கணேஷ், ரமேஷ் ஆகியோர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணம் அடைந்ததை தொடர்ந்து பேனர் வைக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அனுமதியின்றி பேனர் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com