\
ஒன்றரை வயது குழந்தையை கொன்று எரித்த கொடூர தந்தை !

ஒன்றரை வயது குழந்தையை கொன்று எரித்த கொடூர தந்தை !

ஒன்றரை வயது குழந்தையை கொன்று எரித்த கொடூர தந்தை !
Published on

குடும்பத் தகராறு காரணமாக ஒன்றரை வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த முனியசாமி - மரியா அவிஸ்டா தம்பதி இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால், அந்தப் பெண், தனது ஒன்றரை வயது குழந்தையுடன் அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார். குழந்தையை தன்னிடம் தருமாறு முனியசாமி குடிபோதையில் தகராறு போட்டுள்ளார்.

பின்னர் மனைவியை தாக்கி விட்டு, குழந்தையை பறித்துச் சென்ற முனியசாமி, அதன் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு வீடு திரும்பினார்.

குழந்தையை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்ததை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முனியசாமியை கைது சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com