மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் சித்தப்பா

மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் சித்தப்பா
மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் சித்தப்பா

கோவையில் 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சித்தப்பா இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகளும், தொந்தரவுகளும் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு எப்போது ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்காத பெண்களே இல்லை. கோவை தெலுங்குபாளையத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் கெட்ட நோக்கத்துடன் தொடுதல் என்ற தலைப்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வயதுச் சிறுமி ஒருவர் மாவட்ட குழந்தைகள் மைய அதிகாரிகளிடம் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொமையை கூறியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக அவரது தந்தையும், இரண்டு சித்தப்பாவும் அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்ததை கூறியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் அடிப்படையில், அவரது தந்தை, சித்தப்பா என இருவரையும் செல்வபுரம் காவல்துறையினர்  கைது செய்தனர். மேலும் ஒரு சித்தப்பாவை தேடி வருகின்றனர். இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட சிறுமியை தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பராமரிப்பில் காப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com