சென்னையில் பயங்கரம்: மனைவி, இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை

சென்னையில் பயங்கரம்: மனைவி, இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை
சென்னையில் பயங்கரம்: மனைவி, இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை

சென்னை பல்லாவரம் பகுதியையடுத்த பொழிச்சலூர் பகுதியில் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் கருவியால் அறுத்து கொலை செய்த தந்தையொருவர், தானும் தற்கொலை செய்துக்கொண்டு இறந்திருக்கிறார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் இப்படி கொடூரமாக இறந்ததன் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பல்லாவரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ்(41). இவரது அவரது மனைவி காயத்திரி (39). இத்தம்பதிக்கு, நித்யஸ்ரீ(13) என்ற மகளும், ஹரி கிருஷ்ணன் (8) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வீட்டுக்கு இன்று காலை சென்ற பிரகாஷின் தந்தை, வீட்டில் அனைவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் சங்கர் நகர் போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரித்துள்ளனர்.

முதற்கட்டமாக சம்பவ இடத்திலிருந்த கைரேகையை பதிவு செய்து, கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வீட்டுனுள் சோதனைகள் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது இறப்பதற்கு முன் கடிதம் ஒன்றை அக்குடும்பத்தினர் எழுதி வைத்துள்ளது காவல்துறையினருக்கும் தெரியவந்துள்ளது. அக்கடிதத்தில், `தங்களின் இந்த முடிவு, குடும்பத்தோடு சேர்ந்து எடுத்த முடிவு’ என குறிப்பிட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பிரகாஷ் வீட்டில் சுமார் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான கடன் பத்திரம் கிடைத்திருப்பதாகவும், அதனால் கடன் தொல்லையால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழு விவரம் விசாரணைக்கு பிறகே தெரியுமென தெரிவித்துள்ளனர் காவலர்கள்.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/yDIdB8yBTHQ" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

முதற்கட்ட தகவலில் தந்தை பிரகாஷ்தான் மற்ற மூவரையும் கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்துள்ளார் என காவல்துறையினருக்கு தெரியவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய காவல் ஆணையர் ரவி, கடந்த 19-ம் தேதி பிரகாஷ் ஆன்லைனில் மின் ரம்பம் ஆர்டர் போட்டு வாங்கி இருப்பது தெரியவந்திருப்பதாகவும் கூறியுள்ளார். தற்கொலை கடிதத்தை வீட்டின் சுவற்றில் ஒட்டிவிட்டு தற்கொலை செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com