ஒன்றரை வயது மகளை வன்கொடுமை செய்த தந்தை... மருத்துவமனை தகவலால் வெளிவந்த உண்மை!

ஒன்றரை வயது மகளை வன்கொடுமை செய்த தந்தை... மருத்துவமனை தகவலால் வெளிவந்த உண்மை!
ஒன்றரை வயது மகளை வன்கொடுமை செய்த தந்தை... மருத்துவமனை தகவலால் வெளிவந்த உண்மை!

தனது ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சியில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் (31) என்பவர், கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இவர் தினந்தோறும் கஞ்சா மற்றும் மதுபோதையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டவரென சொல்லப்படுகிறது.

இவருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் ஒருநாள் இரவு இவர் தன் குழந்தையின் அருகில் படுத்துள்ளார். சற்று நேரத்தில் குழந்தை அழுதுள்ளது. மகளின் சத்தம் கேட்ட தாய், அருகில் வந்து பார்த்தபோது தனது கணவர் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை உணர்ந்துள்ளார். குழந்தையை உடனே அவரிடமிருந்து மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தக்காயம் இருப்பதாக கூறியுள்ளனர்.

இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து அனைத்து மகளிர் காவல்துறையினர் குழந்தையின் தந்தை மற்றும் தாயிடம் விசாரணை செய்து, குழந்தையின் தந்தை மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com