சென்னையில் மாமியாரின் கொடுமையைத் தாங்கமுடியாமல் மருமகள் தீக்குளித்தார்.
சென்னை பள்ளிகரணை மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் தீனா. இவருக்கும் சுமித்ரா என்பவருக்கும் கடந்த 5ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமானது முதல் சுமிதராவை அவரது மாமியார் கொடுமை செய்து வந்துள்ளார். மாமியாரின் கொடுமையை கணவரும் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் விரக்தியில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். சுமித்ராவின் அலறல் சத்ததைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். 41சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.