லாரி ஓட்டுநருடன் பேஸ்புக் நட்பு - வாழ்வை தொலைத்த 17 வயது சிறுமி

லாரி ஓட்டுநருடன் பேஸ்புக் நட்பு - வாழ்வை தொலைத்த 17 வயது சிறுமி
லாரி ஓட்டுநருடன் பேஸ்புக் நட்பு - வாழ்வை தொலைத்த 17 வயது சிறுமி

பேஸ்புக் மூலம் அறிமுகமான லாரி ஓட்டுநரின் நட்பு, பின்னர் விபரீத உறவாக மாறிய நிலையில், மனம் உடைந்த சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை ஏமாற்றிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த 40 வயது லாரி ஓட்டுநரிடம் பேஸ்புக்கில் நட்பாக பழகியுள்ளார். நாளடைவில் நட்பு நெருக்கமாக, சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியை ஏமாற்றிய லாரி ஓட்டுநர், அவருடனான தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.



ஏமாற்றப்பட்டதால், மனம் உடைந்த அந்த சிறுமி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய மகளிர் காவல்துறையினர், லாரி ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.




Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com