துணை ஆணையர் அலுவலகத்தில் திடீர் லஞ்ச ஒழிப்பு சோதனை; பட்டாசு வெடித்து மகிழ்ந்த ஊழியர்கள்!

துணை ஆணையர் அலுவலகத்தில் திடீர் லஞ்ச ஒழிப்பு சோதனை; பட்டாசு வெடித்து மகிழ்ந்த ஊழியர்கள்!

துணை ஆணையர் அலுவலகத்தில் திடீர் லஞ்ச ஒழிப்பு சோதனை; பட்டாசு வெடித்து மகிழ்ந்த ஊழியர்கள்!

சென்னையில் போக்குவரத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் நேற்றையதினம் திடீரென சோதனை நடத்தினர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள். அதன்முடிவில் கணக்கில் காட்டப்படாத ரூ. 35 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டாசு வெடித்து கொண்டாடிய போக்குவரத்து துறை ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

சென்னை மாவட்ட போக்குவரத்து துறை துணை ஆணையராக இருந்து வருபவர் நடராஜன். இவரது அலுவலகம் சேப்பாக்கம் எழிலகத்தில் இருக்கிறது. இவர் தனது அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்குவதற்காக உதவியாளர்களிடம் ரூ. 5 லட்சம் வீதம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரமாக இந்த சோதனையானது நடந்தது.

இந்த சோதனையில் அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத 35 லட்சம் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 30 உதவியாளர்களிடமிருந்து தலா 5 லட்சம் வீதம் நடராஜன் லஞ்சமாக பெற்றதும் தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்ள்ளனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து நடராஜனிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

போக்குவரத்து துறை துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்து கொண்டிருந்த போது, போக்குவரத்து ஊழியர்கள் வெளியே பட்டாசு வெடித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கிய நிகழ்வு நடந்தது. இது சற்று வேடிக்கையாக இருந்தாலும்கூட, ஊழியர்களே இப்படி செய்தது அப்பகுதியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை ஆணையர் நடராஜன் மீது வழக்குபதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com