வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவர் கைது

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவர் கைது

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவர் கைது
Published on

வீட்டில் தனியாக இருந்த வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்கலூர் கிராமம் அருகே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை (33). வந்தவாசியை அடுத்துள்ள மருதாடு கிராமத்தைச் சேர்ந்த பட்டாபி (எ) பட்டாபிராமன் (61) என்ற முதியவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து, பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து வீட்டார்கள் வந்து பார்த்தபோது முதியவர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். ஊருக்கு சென்று திரும்பிய பெண்ணின் தாயார், வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்தார், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் பட்டாபிராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com