கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல் - நீதிமன்றம் அனுமதி

கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல் - நீதிமன்றம் அனுமதி
கறுப்பர் கூட்டம் செந்தில்வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல் - நீதிமன்றம் அனுமதி

கந்த சஷ்டி கவச பாடலை இழிவுபடுத்திய புகாரில் செந்தில்வாசனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கந்த சஷ்டி கவச பாடலை இழிவுபடுத்திய புகார் தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் முதலில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சுரேந்திரன் உட்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கறுப்பர் கூட்டம் யூடியூப்பில் உள்ள வீடியோக்கள் அனைத்தையும் போலீசார் நீக்கினர்.

இதனைத்தொடர்ந்து செந்தில்வாசனையும் சுரேந்திரனையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர். ஆனால் செந்தில் வாசனை மட்டும் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சுரேந்திரனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி வழங்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com