இரவில் மதுபோதையில் தகராறு.. அதிகாலை வரை ரத்த காயத்துடன் கிடந்த நபர் பரிதாப உயிரிழப்பு

இரவில் மதுபோதையில் தகராறு.. அதிகாலை வரை ரத்த காயத்துடன் கிடந்த நபர் பரிதாப உயிரிழப்பு
இரவில் மதுபோதையில் தகராறு.. அதிகாலை வரை ரத்த காயத்துடன் கிடந்த நபர் பரிதாப உயிரிழப்பு

செங்குன்றம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் உள்ள சிமெண்ட் கடையில் ஜனகராஜ் (43) என்பவர் வேலை பார்த்து வருகிறார். பாடியநல்லூர் ஜி.என்.டி சாலையில் உள்ள ஜெனரேட்டர் சர்வீஸ் சென்டரில் பின்பக்க அறையில் அவர் தங்கியுள்ளார். கடந்த 15-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நாகராஜ் என்பவரை கட்டையாலும் இரும்பு பைப்பாலும் முகத்தில் தாக்கிவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதில் பலத்த ரத்த காயத்துடன் மயங்கிய நிலையில் இருந்த நாகராஜை மறுநாள் காலை நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து, செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பலத்த காயமடைந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜனகராஜ் மீது கொலைமுயற்சி வழக்கு பதியப்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக மருத்துவமனை அளித்த தகவலின்பேரில் கொலைமுயற்சி வழக்கை கொலைவழக்காக மாற்றி செங்குன்றம் போலீசார் ஜனகராஜை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com