சென்னை:தனியார் பார்சல் நிறுவனம் மூலம் போதைப்பொருள் கடத்த முயற்சி;அதிரடி காட்டிய அதிகாரிகள்

சென்னை:தனியார் பார்சல் நிறுவனம் மூலம் போதைப்பொருள் கடத்த முயற்சி;அதிரடி காட்டிய அதிகாரிகள்

சென்னை:தனியார் பார்சல் நிறுவனம் மூலம் போதைப்பொருள் கடத்த முயற்சி;அதிரடி காட்டிய அதிகாரிகள்
Published on

சென்னையில் தனியார் நிறுவனம் மூலம் கத்தார் நாட்டுக்கு கடத்த இருந்த 4.6 கிலோ போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் பார்சல் நிறுவனம் மூலம் வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்தப்படவிருப்பதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சென்னை மண்டல இயக்குநர் அமித் கேவாட் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அது தொடர்பாக சென்னை முழுவதும் ரகசியமாக கண்காணித்தனர்.

அதனைத்தொடர்ந்து சென்னை கிண்டியை அடுத்த ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள அராமெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் பார்சல் நிறுவனத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்குள்ள அட்டைப் பெட்டிகளை திறந்து சோதனையிட்டனர். அப்போது ஒரு அட்டைப் பெட்டிக்குள் நிறைய பொம்மைகள் அடுக்கப்பட்டிருந்தன. அவற்றை பிரித்துப்பார்த்தபோது உள்ளே சாரஸ் என்ற உலர்ந்த கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது கஞ்சா வகையைச் சேர்ந்த போதைப்பொருளாகும். மொத்தம் 4.6 கிலோ சாரசை கைப்பற்றினர். சாரஸ் என்பது கஞ்சாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவகை போதைப்பொருளாகும். முதற்கட்ட விசாரணையில் அவை மேற்கு வங்காளத்தில் இருந்து கத்தார் நாட்டுக்கு பொம்மைகள் என்ற பெயரில் அனுப்பப்பட இருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவற்றை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கொல்கத்தாவைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளால் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சாரஸ் என்ற போதை வஸ்துவை ஆந்திரா – ஒடிசா எல்லையில் உள்ள மலைப்பகுதி, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமாக பயிரிடுகின்றனர் என்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com