இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இரட்டை கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சொத்துத் தகராறில் தாய், மற்றும் சகோதரியை கொலைசெய்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் பரதராமி அருகே உள்ள பூசாரிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனிராஜ் (52). இவர் சொத்துத் தகராறில் தனது தாய் இந்திராணி (70) மற்றும் சகோதரி சின்னம்மாள் (42) ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டூ ஜூன் 10 ஆம் தேதி கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பரதராமி காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து முனிராஜை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக வழக்கின் விசாரணை நடந்துவந்த நிலையில், கொலை நிகழ்ந்த அதே நாளில் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று இறுதி விசாரணை நடந்து முடிந்த நிலையில், நீதிபதி சாந்தி குற்றவாளி முனிராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 5 ஆண்டு சிறை, 25 ஆயிரம் அபராதம் விதித்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கக்கூடும் என்றும் நீதிபதி தீர்பளித்துள்ளார். இதனையடுத்து குற்றவாளி முனிராஜ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com