திமுக கவுன்சிலர் தாக்கியதில் உயிரிழந்த ராணுவ வீரர்!

திமுக கவுன்சிலர் தாக்கியதில் உயிரிழந்த ராணுவ வீரர்!
திமுக கவுன்சிலர் தாக்கியதில் உயிரிழந்த ராணுவ வீரர்!

தி.மு.க., கவுன்சிலர் தாக்கியதில் படுகாயமடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றம்.

 கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி, எம்.ஜி.ஆர். பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (33) இவரது தம்பி பிரபு (29) இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 08.02.2023 அன்று காலை பிரபாகரன் அவரது வீட்டின் அருகே உள்ள நீர்தேக்க தொட்டி அருகே துணி துவைத்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் சின்னசாமி (50) குடிநீர் எடுக்கும் இடத்தில் துணி துவைப்பது சரிதானா என கேள்வி எழுப்பினார். இதுசம்மந்தமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தில் அங்கிருந்த சென்ற கவுன்சிலர் சின்னசாமி, அன்று மாலை மீண்டும் தனது உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோருடன் வந்து பிரபாகரன் மற்றும் பிரபு ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பிரபு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் பிரபு புகாரின் பேரில், நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கவுன்சிலரின் மகன்களான ராஜபாண்டி (30),  சென்னையில் போலீசாக பணிபுரியும் குருசூரியமூர்த்தி (27), குணநிதி (19), மற்றும் அவர்களின் உறவினர்களான மணிகண்டன் (32), மாதையன் (60) வேடியப்பன் (55), உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். 

அடிதடி வழக்கை கொலை வழக்காகமாற்றிய நாகரசம்பட்டி போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள தி.மு.க., கவுன்சிலர் சின்னசாமி உள்பட 5க்கும்மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com