திருவள்ளூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: போலீஸ் விசாரணை

திருவள்ளூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: போலீஸ் விசாரணை
திருவள்ளூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: போலீஸ் விசாரணை

திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளவேடு அடுத்த மேல்மனம்பேடு பகுதியை சேர்ந்த கருணாகரன், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளராக இருந்து வந்தார். வெள்ளவேடு பகுதியில் அவர் நின்று கொண்டிருந்த போது, 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் கருணாகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக எடுத்து செல்ல முற்பட்டபோது, சடலத்தை எடுக்க விடாமல், கருணாகரனின் உறவினர்கள் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததால், கருணாகரனின் உடலை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். கொலைக்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கொலை நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து அதனடிப்படையில் விசாரணை செய்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com