தருமபுரி: டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை - 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்

தருமபுரி: டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை - 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்

தருமபுரி: டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை - 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே டாஸ்மாக் கடையில் வேறு கடை விற்பனையாளரை வைத்து கூடுதல் விலைக்கு மது விற்றதாக மேற்பார்வையாளர், விற்பனையாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுபானக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், அரூர் அடுத்த சிக்களூரில் ஆய்வு மேற்கொண்ட போது, மதுக்கடையின் மேற்பார்வையாளர் காசிநாதன், கூடுதலாக பணம் வசூல் செய்ததும், அங்கு போதிய விற்பனையாளர்கள் இருந்தும், அருகில் உள்ள கடையில் இருந்த விற்பனையாளர் பாஸ்கர் என்பவரை அழைத்து வந்து மது விற்பனையில் கூடுதலாக பணம் வசூலித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கடையின் மேற்பார்வையாளர் காசிநாதன், விற்பனையாளர் பாஸ்கர் ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com