ஓட்டுநர் போக்சோவில் கைது
ஓட்டுநர் போக்சோவில் கைதுpt desk

3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை என பெற்றோர் புகார் - ஓட்டுநர் போக்சோவில் கைது

தருமபுரி அருகே, 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (40). ஓட்டுநராக வேலை பார்க்கும் இவருக்கு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், தருமபுரி அருகே 3 சிறுமிகளின் பெற்றோர்கள் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

Arrested
Arrestedfile

அதில், பெருமாள் என்பவர் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்துள்ளனர். புகார் குறித்து காவல் துறையினர் பெருமாள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com