டெல்லி: செல்போனை திருடியதாக அடித்துக்கொலை; ஒருவர் கைது

டெல்லி: செல்போனை திருடியதாக அடித்துக்கொலை; ஒருவர் கைது
டெல்லி: செல்போனை திருடியதாக அடித்துக்கொலை; ஒருவர் கைது

டெல்லியின் பஞ்சகுயன் சாலையில் உள்ள ஹனுமான் மந்திர் அருகே தனது தொலைபேசி மற்றும் இயர்போன்களைத் திருடியதாகக் கூறி ஒருவரை அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி புது டெல்லி பஞ்சகுயன் சாலையில்,  சாலையின் அருகே ஒரு நபர் மயங்கிக் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.



அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் அவரின் முகம், தோள்கள், மார்பு, வயிறு, முதுகு, தொடை, இடுப்பு போன்றவற்றில் பல காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இறந்தவர் ஒரு நபரால் கொடூரமாக தாக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தற்போது ரிக்சாகாரரான ஷாஹித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com