”சக மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்”- டெல்லி கமிஷ்னரிடம் பெண் மருத்துவர் புகார்

”சக மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்”- டெல்லி கமிஷ்னரிடம் பெண் மருத்துவர் புகார்
”சக மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்”- டெல்லி கமிஷ்னரிடம் பெண் மருத்துவர் புகார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவர் சக மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக டெல்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி காவல் ஆணையர் பெனிட்டா மேரி ஜெய்க்கர் இதுபற்றி கூறுகையில், இதுகுறித்த புகாரை பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரே கொடுத்ததாக கூறினார். செப்டெம்பர் 26ஆம் தேதி தன்னுடன் பணிபுரியும் மருத்துவர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்தார். அங்கு தன்னுடன் பணிபுரியும் மூத்த மருத்துவரால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக ஆணையர் பெனிட்டா கூறினார்.

மேலும் பெண் மருத்துவரின் புகாரின் அடிப்படையில் தப்பியோடிய மருத்துவர்மீது இந்திய சட்டப்பிரிவுகள் 376, 377 ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்பு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அதைவைத்து குற்றவாளியை தேடிவருவதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com