அழுகிய நிலையில் கல்லூரி மாணவனின் சடலம் - கொலையா?

அழுகிய நிலையில் கல்லூரி மாணவனின் சடலம் - கொலையா?
அழுகிய நிலையில் கல்லூரி மாணவனின் சடலம் - கொலையா?

நாமக்கல் அருகே தனியார் பள்ளி கட்டடத்தின் முதல் மாடியில், உடல் அழுகிய நிலையில் கல்லூரி மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்த பாச்சல் பிரிவு சாலை அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கு பின்புறம் ஒரு கட்டடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று அந்தக் கட்டடத்தின் முதல் மாடியில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் புதுசத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அந்த சடலமானது கட்டடத்திற்கு அருகே உள்ள நொச்சிபட்டி அருந்ததியர் தெரு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரது 19 வயது மகன் மோகன்ராஜ் என்பதும் இவர் சேந்தமங்கலம் அரசு கல்லூரியில் பயின்று வருவதும் கடந்த ஒரு வாரமாக அவரை உறவினர்கள் தேடி வந்ததும் தெரிய வந்தது. மோகன் ராஜின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அதே இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீஸார் அடுத்தக்கட்ட விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com