மாமனார், மாமியாரை வீடு புகுந்து தாக்கிய கும்பல் - விசாரணையில் வசமாக சிக்கிய மருமகள்!

மாமனார், மாமியாரை வீடு புகுந்து தாக்கிய கும்பல் - விசாரணையில் வசமாக சிக்கிய மருமகள்!
மாமனார், மாமியாரை வீடு புகுந்து தாக்கிய கும்பல் - விசாரணையில் வசமாக சிக்கிய மருமகள்!

ஈரோடு அருகே திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்ததாக கூறி மாமனார் மாமியாரை கொலைசெய்ய முயற்சிசெய்த வழக்கில் மருமகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு அடுத்த பெருந்துறை சீனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகசாமி- அருக்காணி தம்பதியினர். இவர்களின் மகன் சின்னசாமிக்கு லதா என்பவருடன் திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னசாமி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் முதியோர் முருகசாமி-அருக்காணி தம்பதியினர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்குவந்த மர்ம கும்பல் இருவரையும் கட்டையால் தாக்கிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். இவ்வழக்கில் மலையம்பாளையத்தை சேர்ந்த சங்கர், சரவணன், கொடுமுடியை சேர்ந்த சரவணன் மற்றும் கவியரசு ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறை போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில், முருகசாமி-அருக்காணியின் மருமகள் லதா, தமிழரசன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதற்கு இடையூறாக இருந்த மாமனார் மற்றும் மாமியாரை கொலைசெய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மருமகள் லதாவை போலீசார் கைது செய்தனர்‌. மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான தலைமறைவான தமிழரசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் சிறையில் அடைத்ததுடன் இரண்டு இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதில் சரவணன் மற்றும் கவியரசு ஆகியோர் மீது நாமக்கல் மற்றும் மலையம்பாளையம் காவல்நிலையத்தில் பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com