கொய்யாப்பழம் பறித்த பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை - உ.பி.யில் அரங்கேறிய கொடூர சம்பவம்

கொய்யாப்பழம் பறித்த பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை - உ.பி.யில் அரங்கேறிய கொடூர சம்பவம்
கொய்யாப்பழம் பறித்த பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை - உ.பி.யில் அரங்கேறிய கொடூர சம்பவம்

கொய்யாப்பழம் பறித்ததற்காக பட்டியலின இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் நகரைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரான இவர், சம்பவத்தன்று மற்றொரு சமூகத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான தோப்பில் இருந்து ஒரு கொய்யாப்பழத்தை பறித்து சாப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த தோட்டக்காரர்களான பீம்சென் மற்றும் பன்வாரிலால் ஆகிய இருவரும் சேர்ந்து ஓம்பிரகாஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்து மயக்கமான ஓம்பிரகாஷை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓம்பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஓம்பிரகாஷின் சகோதரர் சத்யபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பீம்சென் மற்றும் பன்வாரிலால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com