கடலூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் உட்பட இருவர் கைது

கடலூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் உட்பட இருவர் கைது
கடலூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் உட்பட இருவர் கைது

வாட்ஸ்ஆப் மூலம் பழகி சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் மற்றும் உடந்தையாக இருந்த இளைஞர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமிக்கு, 17 வயது சிறுவன் வாட்ஸ்ஆப் மூலம் அறிமுகமாகி உள்ளார். இதையடுத்து இருவரும் 3 மாதம் பழகிய நிலையில், சிறுவன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருப்பூருக்கு அழைத்துக் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சிறுவனுக்கு அடைக்கலம் கொடுத்த தொளார் கிராமத்தைச் சேர்ந்த சேவாக் (20) என்பவரையும் கைது  செய்தனர். இதைத் தொடர்ந்து 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com