கடலூர்: ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்ததாக மருத்துவர் கைது

கடலூர்: ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்ததாக மருத்துவர் கைது

கடலூர்: ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்ததாக மருத்துவர் கைது

பெண்ணாடம் அருகே ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த முருகன்குடி பேருந்து நிறுத்தம் அருகே சுகம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த ஹோமியோபதி மருத்துவமனையில் அலோபதி மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திட்டக்குடி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) செல்வேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுகம் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஹோமியோபதி மருத்துவர் கார்த்திகேயன், அலோபதி மருந்துகளை பயன்படுத்தி மருத்துவம் பார்த்ததை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர் செல்வேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் கார்த்திகேயனை கைது செய்து அவரிடமிருந்து அலோபதி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com