’என் தற்கொலைக்குக் காரணம்...’ - தாய்க்கு கடிதம் எழுதிவிட்டு மாணவி எடுத்த முடிவு

’என் தற்கொலைக்குக் காரணம்...’ - தாய்க்கு கடிதம் எழுதிவிட்டு மாணவி எடுத்த முடிவு
’என் தற்கொலைக்குக் காரணம்...’ - தாய்க்கு கடிதம் எழுதிவிட்டு மாணவி எடுத்த முடிவு

குளிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதால் பயந்து போன கடலூரை சேர்ந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் தெற்கு பிச்சாவரம் பகுதியை சேர்ந்தவர் அஜினா தேவி (21). அங்குள்ள ஒரு கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, தனது தாய்க்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தான் குளிப்பதை ஒரு நபர் வீடியோ எடுத்து மிரட்டி வந்ததால் தற்கொலை செய்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை தற்போது காவல்துறையினர் கைப்பற்றி, அஜினா தேவியை மிரட்டிய நபரை தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெண்களுக்கு எதிரான 4 வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

திருப்பாப்புலியூர் பகுதியில் இளம்பெண் ஒருவரை மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது; ராமநத்தம் காவல் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால் அவர் தற்கொலைக்கு முயன்றது; விருத்தாசலம் பகுதியில் எட்டாம் வகுப்பு மாணவிக்கு ஒரு நபர் பாலியல் தொந்தரவு கொடுத்தது; தெற்கு பிச்சாவரத்தில் வீடியோ எடுத்து மிரட்டியதில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது என அடுத்ததடுத்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com