சர்ச்சை கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: தட்டிக்கேட்டவரை கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது

சர்ச்சை கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: தட்டிக்கேட்டவரை கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது
சர்ச்சை கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: தட்டிக்கேட்டவரை கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது

திருச்சி பொன்மலைபட்டியில் வாலிபர் கொலையில், ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் பழிக்குப்பழியாக விரைவில் என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டரை தட்டிக்கேட்ட நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ் (24). இவர், கடந்த 15ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக 16ஆம் தேதி பொன்மலை, பொன்மலைபட்டி, கல்கண்டார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நண்பர்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலி போஸ்ட் ஒட்டப்பட்டது.

அதில், இன்று இறுதி ஊர்வலம் மாலை 4 அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்ற வாசகத்துடன் விரைவில் என்ற வார்த்தை அச்சிடப்பட்டிருந்தது. இந்த விரைவில் என்ற வார்த்தை பழிக்கு பழி என்ற வாசகமாக கருதப்பட்டது. இந்த போஸ்டரை படித்த பொன்மலைபட்டி சார்லஸ் (46) என்பவர் இந்த வாசகம் குறித்து கேட்டுள்ளார்.

இதையடுத்து இறந்த சின்ராஜின் அண்ணன் கொட்டப்பட்டு ஜே.ஜே நகரைச் சேர்ந்த ரமேஷ் (26), பொன்மலைபட்டி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோஸ்வா (20), இவரது அண்ணன் டார்வின் (23), சுப்ரமணியபுரம் ஜெய்லானியா தெருவைச் சேர்ந்த நந்தா (23), கல்லுக்குழி முடுக்குபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23) ஆகிய 5 பேரும் சார்லஸுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சார்லஸ் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷ், ஜோஸ்வா, டார்வின் நந்தா, மணிகண்டன் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 3 பேரை பொன்மலை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com