`அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி வரை மோசடி’- ராஜேந்திர பாலாஜி மீது புகார்

`அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி வரை மோசடி’- ராஜேந்திர பாலாஜி மீது புகார்
`அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி வரை மோசடி’- ராஜேந்திர பாலாஜி மீது புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் 2 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர், மனைவி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சண்முக நாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளரான சுதாகரன் என்பவர் தனக்கு நெருங்கிய நண்பர் எனவும், அவர் அமைச்சரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதனால் அரசு வேலை தேடி கொண்டிருந்த நபர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பெற்று அமைச்சரின் உதவியாளர் சுதாகரன் என்பவரிடம் தலைமை செயலகத்தில் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பல வருடங்களாக குறிப்பிட்ட வேலை வழங்காமல் இருந்ததினால் சந்தேகமடைந்து உதவியாளர் சுதாகரிடம் கேட்ட போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பணம் முழுவதையும் கொடுத்துவிட்டதாகவும், உடனடியாக வேலை கிடைத்துவிடும் என காலம் தாழ்த்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வேறு வழியின்றி பணத்தை திரும்ப கேட்க தலைமை செயலகம் சென்ற போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை கட்டாயமாக கிடைத்துவிடும் என சமரசம் செய்து அனுப்பியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் பணம் கேட்டு உதவியாளர் சுதாகரன் அவரது மனைவி தேவிஸ்ரீயிடம் கேட்ட போது, ராஜேந்திரபாலாஜியின் உதவியாளராக தற்போது இல்லை எனவும் அவரிடம் தான் பணம் இருப்பதாகவும், இனி பணம் கேட்டு தொந்தரவு செய்தால் ஆட்களை வைத்து கொலை செய்து கூவத்தில் வீசிவிடுவேன் என அவர்கள் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் தன்னை மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உதவியாளர் சுதாகரன், அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோரிடம் இருந்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் எனவும் கொலை மிரட்டல் விடுத்த சுதாகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com