ஆத்தூர்: காதலியுடன் கருத்து வேறுபாடு.. மனமுடைந்த கல்லூரி மாணவர் விபரீத முடிவு

ஆத்தூர்: காதலியுடன் கருத்து வேறுபாடு.. மனமுடைந்த கல்லூரி மாணவர் விபரீத முடிவு
ஆத்தூர்: காதலியுடன் கருத்து வேறுபாடு.. மனமுடைந்த கல்லூரி மாணவர் விபரீத முடிவு

சேலத்தில் தலைவாசல் அருகே காதல் விவகாரத்தில் தற்கொலைக்கு முயன்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவருக்கு நந்தழகன், அய்யாவு, அண்ணாமலை என்ற மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நந்தழகன் வாழப்பாடி அருகே மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் B.Tech IT-ல் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரியில் தன்னுடன் படித்த ஒரு பெண்ணை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட நந்தழகன், நேற்றிரவு வீட்டிலிருந்த போது விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைப்பார்த்த பெற்றோர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் நந்தழகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நந்தழகனின் தந்தை நல்லதம்பி, தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகன் சாவிற்கு காரணமான கல்லூரி மாணவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

அதன்பேரில் தலைவாசல் வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- செய்தியாளர்: ரவி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com