திண்டுக்கல் நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கல்லூரி அறைகளுக்கு சீல்

திண்டுக்கல் நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கல்லூரி அறைகளுக்கு சீல்
திண்டுக்கல் நர்சிங் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கல்லூரி அறைகளுக்கு சீல்

பாலியல் புகாரில் திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரி அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ளது முத்தனம்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் தாளாளராக ஜோதி முருகன் என்பவர் இருந்து வருகிறார். இங்கு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று 18.11.21 கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி தாளாளர் விரைவில் கைதுசெய்யப்படுவார் என மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆனால் இன்று காலை மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் விடுதிக் காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் வருவாய் அலுவலர், காவல் கண்காணிப்பாளர், டிஐஜி தலைமையிலான குழு கல்லூரியின் அறைகளுக்கு சீல் வைத்துள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை போலீஸ் தேடிவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com