வீடு புகுந்து லட்சக்கணக்கில் நகை, பணம் கொள்ளை - 48 மணிநேரத்தில் பிடித்த கோவை போலீசார்

வீடு புகுந்து லட்சக்கணக்கில் நகை, பணம் கொள்ளை - 48 மணிநேரத்தில் பிடித்த கோவை போலீசார்
வீடு புகுந்து லட்சக்கணக்கில் நகை, பணம் கொள்ளை - 48 மணிநேரத்தில் பிடித்த கோவை போலீசார்

கோவையில் வீடு புகுந்து கொள்ளையடித்தவர்களை 48 மணி நேரத்தில் கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 17 1/4 சவரன் தங்க நகைகள், ரூ.1,85,000 ரொக்க பணம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் பெரியசாமி(49) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28.11.2022 ஆம் தேதி பெரியசாமி வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி முன்பக்க கதவை அடைத்துவிட்டு குளிப்பதற்காக சென்றுள்ளார். அவர் மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச்செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் பணமும் திருடு போனது தெரியவந்துள்ளது.

உடனடியாக அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கவே, பெரியசாமி வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அரவிந்த்(23) மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் முத்துசுருளி(35) ஆகிய இரண்டு இளைஞர்களையும் கைது செய்தனர்.

அவர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்த 17 1/4 சவரன் தங்க நகைகள், ரூ.1,85,000 ரொக்க பணம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com