கோவையில் முட்புதரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமி கொலை வழக்கில், சிறுமியை கொலை செய்ததாக அவரின் குடும்ப நண்பரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை சரவணம்பட்டி பகுதி யமுனா நகரில் நேற்று (டிச.16) கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் 14 வயது சிறுமியின் உடலானது கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், 13ம் தேதியன்று அந்த சிறுமி மாயமானதாக அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தது தெரியவந்தது. டிச்.11-ல் சிறுமி காணாமல் போயிருந்தார்.
தொடர்புடைய செய்தி: கோவையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டம்