சென்னை: பட்டாக் கத்திகளுடன் இருசக்கர வாகனத்தில் வலம்வந்த இரு ரவுடிகள் கைது

சென்னை: பட்டாக் கத்திகளுடன் இருசக்கர வாகனத்தில் வலம்வந்த இரு ரவுடிகள் கைது
சென்னை: பட்டாக் கத்திகளுடன் இருசக்கர வாகனத்தில் வலம்வந்த இரு ரவுடிகள் கைது

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த இருவரை கைது செய்த போலீசார், 4 பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 4 பட்டாக் கத்திகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் கல்லறை ஜான், வெள்ளை அர்ஜுன் என்பதும், இதில் கல்லறை ஜான் மீது 4 கொலை வழக்கு இருப்பதும், அர்ஜுனுக்கு ஒரு கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து 4 பட்டாக் கத்திகளையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com