சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
Published on

குன்றத்தூரில் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்

குன்றத்தூர், ஒண்டி காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன் (24). இவர் குன்றத்தூர் பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 1-ம் தேதி அழைத்துச் சென்று விட்டதாக பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் வியாசர்பாடியில் இருந்த அந்த சிறுமியை மீட்டு பாண்டியனை கைது செய்து விசாரணை செய்ததில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியனை குன்றத்தூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com