சென்னை: காரில் கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலை

சென்னை: காரில் கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலை
சென்னை: காரில் கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல்: தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலை

சென்னை போரூர் அருகே வானகரத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போக்குவரத்து காவல் துறையினர் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.

சென்னை பூந்தமல்லி போக்குவரத்து காவல் துறையில் காவலராக பணியாற்றி வருபவர் ஜேம்ஸ். இவர், இன்று காலை சென்னை போருர் சுங்கச்சாவடி அருகே பணிக்கு வரும்போது மதுரவாயில் புறவழி சாலையில் ஆந்திரா பதிவெண் கொண்ட கார் ஒன்று அவரை இடிக்குமாறு வந்து அதிவேகமாக சென்றது

இதையடுத்து அருகே பணியில் இருந்த மற்றொரு போக்குவரத்து காவலர் வெங்கடாசலம் என்பவரின் உதவியுடன் அந்த காரை மடக்கிப் பிடித்தபோது காரில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். பின்னர் காரை சோதனை செய்தபோது அதில் 300 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அதை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து தப்பியோடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com