சென்னையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் : ஒருவர் கைது

சென்னையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் : ஒருவர் கைது
சென்னையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் : ஒருவர் கைது

தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 250 கிலோ போதைப்பொருள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கத்தில் உள்ள கிடங்கு ஒன்றில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து பல்வேறு கடைகளுக்கு விநியோகம் செய்வதாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கொட்டிவாக்கத்தில் உள்ள கிடங்கில் நீலாங்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழன்பன் தலைமையில், காவலர் இன்பராஜ் உள்ளிட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 250 கிலோ குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com