சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு
சென்னை கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

சென்னையில் பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

கே.கே.நகரிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட பள்ளியில், வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ராஜாகோபாலன் என்பவர், ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், வகுப்பறையில் பாடமெடுக்கும்போதும், மாணவிகளை சங்கடத்திற்கு உள்ளாக்கும் வகையில், அவர்களின் தோற்றத்தைப் பற்றி கருத்து தெரிவித்தல், தவறான நோக்கத்துடன் மாணவிகளைத் தொடுதல் உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ள முன்னாள் மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவிகள் விபரம் வெளிப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, தனது ட்விட்டர் பதிவு மூலம் இவ்விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார் பாடகி சின்மயி. அவரது ட்விட்டர் பதிவில், விளம்பர மாடல் நடிகையான க்ரிபாலி என்பவர், சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் துணிச்சலுடன் புகார் தெரிவிக்க முன்வர வேண்டும்” என்று அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com