சென்னையில் கணவன்-மனைவி அடித்துக் கொலை : வடமாநிலத்தவர் கைது

சென்னையில் கணவன்-மனைவி அடித்துக் கொலை : வடமாநிலத்தவர் கைது
சென்னையில் கணவன்-மனைவி அடித்துக் கொலை : வடமாநிலத்தவர் கைது

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொட்டிவாக்கம், ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர்கள் மாயாண்டி - வள்ளிநாயகி தம்பதியினர். இவர்களது மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் இவர்கள் இருவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் எதேச்சையாக சென்று பார்த்தபோது முதியவர்கள் இருவரும் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துரைப்பாக்கம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவைக் கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபர் அப்பகுதியில்  சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் வடமாநிலத்தை சேர்ந்த ஆலன் என்பதும், டைல்ஸ் ஒட்டும் பணிகளை மேற்கொண்டுவருவதும் காவல்துறைக்குக்கு தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நபரை பிடித்து விசாரித்ததில் வயதான தம்பதியை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், மாயாண்டி வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியை ஆலம் மேற்கொண்டுள்ளார்.  இதற்கு முன்பணமாக சில தொகையை மாயாண்டி அளித்துள்ளார். பணி நிறைவடைந்தும் பாக்கி தொகையை தருவதாக மாயாண்டி கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி மாயாண்டி பணத்தை தராமல் ஆலமை அலைக்கழித்துள்ளார். டைல்ஸ் ஒட்டும் பணியின் போது முதியவர்கள் மட்டும் வீட்டில் இருப்பதை அறிந்திருந்த ஆலன் நேற்றிரவு மாயாண்டி வீட்டிற்கு சென்றுள்ளார். பணத்தைக்கேட்டு சென்ற ஆலம் பணம் கிடைக்காத ஆத்திரத்தில் மாயாண்டியையும் அவரது மனைவியையும் அடித்துக்கொலை செய்துவிட்டு. வீட்டில் இருந்த 13 சவரன் நகைகளை எடுத்துச்சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com