சென்னை: கத்தி முனையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

சென்னை: கத்தி முனையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது
சென்னை: கத்தி முனையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர் கைது

கல்லூரி மாணவியை வீடு புகுந்து கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளையை பகுதியில் வசித்து வரும் 22 வயது கல்லூரி மாணவி, வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில் அங்கு வந்த இளைஞர் கத்தி முனையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அவரது அக்காவிடம் கூறியுள்ளார். அவர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (20), என்பவரை கைது செய்த போலீசார், அவரை தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சுற்றித் திரிந்தபோது அந்த வீட்டில் இருந்து ஒருவர் மரத்தின் வழியாக இறங்கி செல்வதை கண்டு ஏதாவது கிடைக்கும் என திருடச் சென்றேன் அப்போது இளம்பெண் இருந்ததால் மனம் மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து அவன் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com