சென்னை: மதுபோதையில் நண்பர்களால் ஆட்டோ ஓட்டுநருக்கு நிகழ்ந்த கொடூரம்

சென்னை: மதுபோதையில் நண்பர்களால் ஆட்டோ ஓட்டுநருக்கு நிகழ்ந்த கொடூரம்
சென்னை: மதுபோதையில் நண்பர்களால் ஆட்டோ ஓட்டுநருக்கு நிகழ்ந்த கொடூரம்

சென்னை மணலி புதுநகரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை மணலி புதுநகரை அடுத்த பழைய நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (28). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்றிரவு வேலை முடித்து விட்டு நண்பர்களுடன் மணலி புதுநகர் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து கத்தியால் ரவிச்சந்திரன் தலையில் வெட்டிள்ளனர்.

அப்போது கத்தி உடைந்ததை அடுத்து 4 பேரும் சேர்ந்து அருகிலிருந்த கல்லை எடுத்து ரவிச்சந்திரன் தலையில் போட்டுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த மணலி புதுநகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ரவிச்சந்திரனை கொலை செய்த அவரது நண்பர்களான மதன்குமார், ஜெயபிரகாஷ், தனுஷ் மற்றும் பரத் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மதுபோதையில் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. அப்போது ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்து விட்டு, அதனை செல்ஃபி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து கொலையாளிகளின் செல்போன்களை காவல் துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். இவர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை மத்திய புழல் சிறையில் அடைத்தனர். மதுபோதையில் நண்பர்களே கொலை செய்து விட்டு செல்ஃபியும் எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com