சென்னை: வரன் தேடிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

சென்னை: வரன் தேடிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
சென்னை: வரன் தேடிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமான பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் வசித்து வரும் 27 வயது இளம்பெண். கடந்த 2021 ஆம் ஆண்டு தனது தகவல்களை திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். அதன்படி திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகமான செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பழைய மகாபலிபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த ராகுல் என்பவருடன் பழகி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி திருமணம் தொடர்பாக நேரில் பேசவேண்டுமென அந்தப் பெண்ணை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்ற ராகுல், தான் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்தை குளிர்பானத்தில் கலந்து அந்தப் பெண்ணுக்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து குளிர்பானத்தை குடித்த அந்தப் பெண் மயங்கிவிட அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்த அந்தப் பெண் இதுகுறித்து கேட்டதற்கு திருமணம் செய்துகொள்வதாக ராகுல் உறுதியளித்துள்ளார். ஆனால் ராகுல் திருமணம் செய்யாமல் பல நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராகுலை தொடர்ந்து வற்புறுத்திய போது ஒரு கட்டத்திற்கு மேல் ராகுல் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கிண்டி அனைத்து மகளிர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராகுல் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராகுலை கைது செய்த கிண்டி அனைத்து மகளிர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com