சென்னை: சிறுமியை காதலிக்கச் சொல்லி மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது

சென்னை: சிறுமியை காதலிக்கச் சொல்லி மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது

சென்னை: சிறுமியை காதலிக்கச் சொல்லி மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது
Published on

அம்பத்தூரில் 16 வயது சிறுமியை புகைப்படம் எடுத்து காதலிக்கச் சொல்லி வற்புறுத்திய இளைஞரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அம்பத்தூரை அடுத்த புதூர், சித்து ஒரகடத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி வீட்டில் இருந்து கடைக்குச் சென்ற சிறுமியை பின்தொடர்ந்து வந்த இளைஞர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சிறுமியை புகைப்படம் எடுத்த அந்த இளைஞர், காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்குச் சென்ற சிறுமி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையிலான போலீசார், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், புதூர், திருத்தணிகை நகர், 3வது தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (21) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த இளைஞரை கைது செய்த போலீசார், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com