சென்னையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் யோகா பயிற்சியாளர் யோகராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு வீடியோ எடுத்து மிரட்டுவதாக யோக பயிற்சியாளர் மீது இளம் பெண் புகார் அளித்தார். அதேபோல் யோக பயிற்சியாளர் யோகராஜ் மீது திருப்பூர், மும்பை, ஹாங்காங் போன்ற இடங்களில் பாலியல் புகார் உள்ளதாகவும் இளம் பெண் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் யோக பயிற்சியாளர் யோகராஜை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.