சென்னை: சொமேட்டோ பெயரில் மதுபான பாட்டில்களை டோர் டெலிவரி செய்த நபர் கைது

சென்னை: சொமேட்டோ பெயரில் மதுபான பாட்டில்களை டோர் டெலிவரி செய்த நபர் கைது

சென்னை: சொமேட்டோ பெயரில் மதுபான பாட்டில்களை டோர் டெலிவரி செய்த நபர் கைது

மதுபான பாட்டில்களை டோர் டெலிவரி செய்து வந்த சொமேட்டோ ஊழியரை போலீசார் கைது செய்து 10 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை - கேஜி ரோடு சந்திப்பில் டிபி சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சொமேட்டோ பனியன் அணிந்து வந்த நபரை பிடித்து அடையாள அட்டையை கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் இவர் கொண்டு செல்லும் உணவு பெட்டியை சோதனை செய்தபோது 10 பீர் பாட்டில்கள் இருந்தது. இதையடுத்து பீர் பாட்டிலை பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணயில் கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் (32) என்பது தெரியவந்தது.

இவர், ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் நபர்களின் வீட்டிற்குச் சென்று மதுபானங்களை டோர் டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது. உணவு கொடுப்பது போல் எடுத்து சென்றால் போலீசார் யாரும் சோதனை செய்யமாட்டார்கள் என எண்ணி சென்றதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து டி.பி சத்திரம் போலீசார் பிரசன்னா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com