சென்னையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 9 பேருக்கு குண்டாஸ்!

சென்னையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 9 பேருக்கு குண்டாஸ்!
சென்னையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 9 பேருக்கு குண்டாஸ்!

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 9 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை திட்டமிட்டது. குறிப்பாக கொலை, கொள்ளை, இரு சக்கர வாகனங்கள் திருடுவது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த திருவான்மியூர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த டெல்லி என்கிற விஜயகுமார், தியாகராஜன், கார்த்திக், மாரியப்பன், சுரேஷ், புண்ணியமூர்த்தி, சங்கர் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். 
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 9 பேர் மீதும் கொலை முயற்சியில் ஈடுபட்டது, வீடு புகுந்து திருடியது, இரு சக்கர வாகனங்கள் திருடியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் பல்வேறு வழக்குகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com