சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் அக்காவை தம்பியே அடித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் மீன் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர் இறந்து விட்டதால் 2-வது திருமணம் செய்து கொண்டு சுனாமி குடியிருப்பில் தமது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த அவரது தம்பி பிரதாப், தனது அக்கா வேறு ஒருவருடன் முறையற்ற உறவில் ஈடுபட்டு இருந்ததை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது அக்காள் சுப்புலட்சுமியை அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த சுப்புலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, பிரதாப்பை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.