சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது

சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது
சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது

சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்து செய்யப்பட்டார்.

சென்னை பாரிமுனை பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, கடந்த 11-ம்தேதி பெற்றோரிடம் கோபித்து வெளியே சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை என சிறுமியின் பெற்றோர் ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் 'சிறுமி காணவில்லை' என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

இந்நிலையில், காணாமல் போன சிறுமியை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மூசா கலிமுல்லா என்பவர் மெரினா கடற்கரையில் ரோந்து வாகன பணியிலிருந்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஏழுகிணறு காவல்நிலைய எல்லையில் காணாமல் போன சிறுமி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை ஏழுகிணறு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில், வீட்டில் கோபித்து கொண்டு மெரினா கடற்கரைக்குச் சென்ற சிறுமியை ஆட்டோ ஓட்டுநர் மூசா கலிமுல்லா தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் பூக்கடை அனைத்து மகளிர் போலீசார், ஆட்டோ ஓட்டுநர் மூசா கலிமுல்லாவை போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், மூசாகலிமுல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com