சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் டெண்டர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தலைமை பொறியாளராக இருந்தபோது, காத்பால் என்பவர் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பலனாக அவர் 5 கோடியே 89 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, காத்பால், தனியார் நிறுவன இயக்குநர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.