லஞ்ச புகாரில் ஐ.சி.எஃப் முன்னாள் தலைமை பொறியாளர் கைது: மேலும் ரூ4.28 கோடி பறிமுதல்

லஞ்ச புகாரில் ஐ.சி.எஃப் முன்னாள் தலைமை பொறியாளர் கைது: மேலும் ரூ4.28 கோடி பறிமுதல்
லஞ்ச புகாரில் ஐ.சி.எஃப் முன்னாள் தலைமை பொறியாளர் கைது: மேலும் ரூ4.28 கோடி பறிமுதல்
சென்னை ஐ.சி.எஃப் - முன்னாள் தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் லஞ்சம் வாங்கி கைதான விவகாரத்தில், மேலும் 4 கோடியே 28 லட்ச ரூபாய் வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் டெண்டர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி தலைமை பொறியாளராக இருந்தபோது, காத்பால் என்பவர் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பலனாக அவர் 5 கோடியே 89 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, காத்பால், தனியார் நிறுவன இயக்குநர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
காத்பாலுக்கு சொந்தமான டெல்லி மற்றும் சென்னையில் உள்ள 9 இடங்களில் சோதனை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள் சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய், 23 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இரண்டாவது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் 4 கோடியே 28 லட்ச ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள், லாக்கர் சாவிகளை பறிமுதல் செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. டெண்டர் முறைகேட்டில் ஐ.சி.எஃப் சார்ந்த மற்ற அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com